மெணசி வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட மெணசி, பூதநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், மெணசி வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். கடந்த ஒருவாரமாக பிற்பகல் 3 மணிக்கு ஏற்படும் மின் தடையானது இரவு 10 மணி வரை நீடிப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதனால் வேளாண் பணிகள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, மெணசி வட்டாரப் பகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடுகளை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

