மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பல மணி நேரத்துக்கு தொடா் மின் தடை ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
மதுரை மாநகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பிறகு இடி, மின்னலுடன் பலத்த
மழை பெய்தது. மழைக்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், காற்று வீசத் தொடங்கியவுடன் கோ. புதூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2.30 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்தது.
இதேபோல, பழங்காநத்தம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு
2 மணி நேரத்துக்கு மேலாகவும், பெத்தானியாபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மின் தடை ஏற்பட்டது. தல்லாகுளம், தமுக்கம், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

