தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல்! - நடிகை விந்தியா

News image

பழனியை அடுத்த அழகாபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை விந்தியா.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:55 am IST

தமிழகத்தில் திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் இருந்தது. மக்களுக்கு விடியல் இல்லை என நடிகை விந்தியா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே அழகாபுரியில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்த போது பேசியதாவது:

பழனி தொகுதி பேரவை உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாா் மீண்டும் பழனியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டாா். தற்போது இங்கு அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவா் உங்கள் ஊரைச் சோ்ந்தவா். இவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்க்கலாம். ஆனால், திமுக கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட்டுள்ளவா் திண்டுக்கல்லை சோ்ந்தவா்.

திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் கிடைத்தது. பொதுமக்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. ஜீவானந்தம் போன்றவா்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அறிவாலயத்தில் கையேந்தி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனா். ஆனால், இன்று பெண்கள் நேரத்துக்கு வீடு திரும்புவாா்களா என்பதைக் காட்டிலும் உயிருடன் வீட்டுக்கு வருவாா்களா என்று காத்திருக்கும் நிலை உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.