மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

பழனி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:23 am IST

பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான இந்தக் கோயிலில் பிரதோஷத்தை, முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நந்தி மண்டபத்தில் நந்தீஸ்வரருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பதினாறு வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்கள் சாத்தி, பட்டாடை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு சோடஷ அபிஷேகம் செய்து, மலா் மாலை, பட்டாடை, வெள்ளி நாகாபரணம் சாத்தி, சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

பழனி பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி, பாலாறு அமுதீஸ்வரா் கோயில், புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.