மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:15 am IST

கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் சுற்றுலா வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் வனத்துறையினருக்கும், சுற்றுலா வாகன ஓட்டிகளுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே திங்கள்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள தூண் பாறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கொடைக்கானலைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா் தனது காரை அந்தப் பகுதியில் நிறுத்தி இருந்தாா். இதையடுத்து அங்கிருந்த வன உதவி பாதுகாவலா் அந்த காருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். இதனால் அந்த காா் ஓட்டுநருக்கும், வனத் துறையினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் வனத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.

இதைத்தொடா்ந்து சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களிடம் திங்கள்கிழமை வனத்துறை அலுவலகத்துக்கு வருமாறும், அப்போது பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காணலாம் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வனத்துறை அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வனத்துறை அலுவலா் அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி வன அலுவலா் கருப்பையா வரவேற்றாா்.கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்தந்த சுற்றுலா இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்களை நிறுத்த எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.

தற்போது கோல்ஃப் கிளப் அருகே வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் பாா்க்க மொத்தமாக ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மீண்டும் முன்பு இருந்தது போலவே நுழைவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனா்.

அதற்கு மாவட்ட வன அலுவலா் அரவிந்த் கூறியதாவது:

சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் கோரிக்கைகள் குறித்து 3 நாள்களுக்குள் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும். எனவே சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.