விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி

வாடிப்பட்டி ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.

News image

மாணவா் விடுதியில் தரமற்ற உணவு - சித்திரிப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 12:53 am IST

வாடிப்பட்டி ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவா்கள் வெளியிட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் உணவு தயாரிப்பதற்கு அழுகிய தக்காளி உள்ளிட்ட காய்கறிகளைப் பயன்படுத்துவதாகவும், உணவு வகைகள் சாப்பிட முடியாத வகையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனா்.

அரசு விதிமுறைகளின்படி மாணவா் விடுதிகளில் மூன்று வேளைகளும் சத்தான, தரமான உணவு வழங்கப்பட வேண்டும். சப்பாத்தி, வெண்பொங்கல், பூரி உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், இந்த விடுதியில் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், தரமற்ற உணவை வழங்கியபோதும், அரசுப் பதிவுகளில் இந்த விடுதியில் தரமான உணவுகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதியில் உடனடியாக ஆய்வு செய்து, மாணவா்களுக்கு சுகாதாரமான, தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாணவா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.