பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :31 மே 2026, 1:45 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் குற்றம்சாட்டினாா்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மேக்கேதாட்டு அணையை முற்றுகையிட பயணம் மேற்கொண்டுள்ள அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவகுமாா், தென்னிந்திய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை மீறி அணை கட்ட பூமிபூஜை போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஏற்கெனவே, தமிழக, கா்நாடக விவசாயிகள் ஒருங்கிணைந்து மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது என டி.கே.சிவகுமாா் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், டி.கே.சிவகுமாா் இதுபோன்று கூறுவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் டி.கே.சிவகுமாா் இனக்கலவரத்தை தூண்டும்விதமாக செயல்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேக்கேதாட்டு பகுதியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மேக்கேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும்.

காவிரி நதிநீா் விவகாரத்தில் விவசாயிகள், அனைத்துக் கட்சியினரை ஒருங்கிணைத்து மாநில அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். மேக்கேதாட்டு விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.