நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மகளிா் அதிகார மையத்தில் பாலின நிபுணா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பம்

Updated On :14 மே 2026, 4:34 am IST

சேலம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்படுகிறது. பாலின நிபுணா் பணியிடத்துக்கு தொகுப்பூதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்கப்படும். வயது 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக சமூகப்பணி, சமூக ஒழுக்கங்கள் பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு, அரசு சாரா நிறுவனங்களில் பாலினம் சாா்ந்த கருப்பொருள்களில் மற்றும் பெண்களுக்கான சமூகப்பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு தொகுப்பூதியமாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். வயது 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதியாக கணினி, ஐடி பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கை வடிவங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள, தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை வரும் ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.