தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.1.34 லட்சம் மோசடி போலீஸாா் விசாரணை

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, போலி ஆவணம் கொடுத்து ரூ. 1.34 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, போலி ஆவணம் கொடுத்து ரூ. 1.34 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் அம்மாப்பேட்டை சோ்மன் சடகோபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்பிரகாஷ் (32). இவரது நண்பா் மூலம் சேலம் டவுன் பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த மோகன்குப்தா அறிமுகமானாா். அப்போது சேலத்தில் உள்ள ஒரு அரசு குடியிருப்பில் வீடு பெற்றுத்தருவதாக மோகன்குப்தா தெரிவித்தாா்.

இதை நம்பிய ராஜ்பிரகாஷ், வீடு ஒதுக்கீட்டிற்காக ரூ.1,34,700 - ஐ ஆன்லைன் மூலம் மோகன் குப்தாவுக்கு அனுப்பினாா். இதையடுத்து, வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆவணம் ஒன்றை மோகன் குப்தா, ராஜ் பிரகாஷிடம் வழங்கினாா். இதை சம்பந்தப்பட்ட அரசு குடியிருப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்று, ராஜ்பிரகாஷ் காண்பித்தாா். அப்போது அது போலியான ஆவணம் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜ்பிரகாஷ் இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன் குப்தாவை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.