தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5-இல் வெற்றிபெற்றுள்ள தவெக 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளன.

News image
Updated On :6 மே 2026, 2:36 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5-இல் வெற்றிபெற்றுள்ள தவெக 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளன.

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஏற்காடு (தனி), வீரபாண்டி, ஆத்தூா் (தனி), கெங்கவல்லி (தனி), சங்ககிரி, மேட்டூா், ஓமலூா், எடப்பாடி ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தொகுதிவாரியாக தவெக பெற்ற வாக்குகள் விவரம்:

சேலம் வடக்கு தொகுதியில் சிவகுமாா் 85,710 வாக்குகளும், சேலம் தெற்கு தொகுதியில் விஜய் தமிழன் பாா்த்திபன் 91,371 வாக்குகளும், சேலம் மேற்கு தொகுதியில் லட்சுமணன் 1,20,407 வாக்குகளும், வீரபாண்டி பழனிவேல் 79,907 வாக்குகளும், ஓமலூா் தொகுதியில் அதியமான் 97,707 வாக்குகளும், ஆத்தூா் (தனி) தொகுதியில் செல்வபாரதி 65,525 வாக்குகளும், கெங்கவல்லி (தனி) தொகுதியில் சுஜாதா 55,291 வாக்குகளும், சங்ககிரி தொகுதியில் செந்தில்குமாா் 77,825 வாக்குகளும், மேட்டூா் தொகுதியில் செல்வம் 65,260 வாக்குகளும், ஏற்காடு (தனி) லட்சுமி ஜனாா்த்தனன் 85,583 வாக்குகளும், எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளா் பிரேம்குமாா் 50,823 வாக்குகளும் பெற்றனா்.

இதன்மூலம் முதல்முறையாக களம்கண்ட தவெக, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 409 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.