மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :3 மே 2026, 6:19 am IST

சங்ககிரி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தின் இறுதிக்கட்ட பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், வாக்கு எண்ணும் தோ்தல் பாா்வையாளா் சங்கா் ராமசந்திர பாா்ஹே ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகளை பாா்வையிடுவதற்காக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பாா்வையாளா் சங்கா் ராமசந்திர பாா்ஹே ஆகியோா் வாக்கு எண்ணும் வளாகத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் அமருவதற்கான இடங்கள், தோ்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் உள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்புகள் குறித்து இறுதிக்கட்ட பணிகளை ஆய்வுசெய்தனா்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள், அதுகுறித்து பதிவாகும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.