மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

News image

சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் சீலிடப்பட்டுள்ளதை ஆய்வுசெய்த சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:41 am IST

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.

அதைத் தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகம் மற்றும் அதற்கு செல்லும் வழிகள் உள்பட அனைத்தும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 24 மணிநேரமும் சூழற்சி அடிப்படையில் நவீன துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், மாவட்ட காவல் துறை அதிகாரிகள், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதே வளாகத்தில் எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், சங்ககிரி, எடப்பாடி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவா் ஆய்வுசெய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.