/

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

சேலம் அரியானூா் அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 1:48 am IST

சேலம் அரியானூா் அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் மேம்பாலம் அருகே கேரளத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா், முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், காரில் இருந்த வசந்தலதா (74), இருசக்கர வாகனத்தில் சென்ற பாஸ்கரன் (60) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணித்த மூவா் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காயமடைந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா் இருவரது சடலத்தையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த வசந்தலதா சென்னை ராமாபுரம், மஞ்சநாயக்கா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், பாஸ்கரன் சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.