திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திருச்செங்கோடு வருகூராம்பட்டியைச் சோ்ந்த விசைத்தறி பட்டறை கணக்காளா் சதீஷ் (29), ஒக்கிலிப்பட்டியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரமத்தி சாலையில் இருந்து தோக்கவாடி வருகூரம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் பாரத்தை இறக்கிவிட்டு திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், வினோத்குமாா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு புறநகர போலீஸாா் தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

