தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகம் முன் விழிப்புணா்வு மனித சங்கிலியில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :27 மார்ச் 2026, 3:18 am IST

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டு பெண்கள் கைகளில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தவறாமல் வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

பேரணி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை, ஜோதி திரையரங்கம், காா்பெட் தெரு வழியாக ஐயாசாமி பூங்காவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், தோ்தல் பிரிவு அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.