மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

மேட்டூரில் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த சேலம் மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:32 am IST

மேட்டூரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், இளம் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வாக்காளா்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையொப்ப இயக்கம், செல்பி பாயிண்ட், வாகனப் பேரணி, நடைபேரணி உள்ளிட்ட தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, மேட்டூா் சின்ன பூங்கா பகுதியில் கலை நிகழ்ச்சிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பாரம்பரியமிக்க நடனங்கள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையிலும், வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

இப்பேரணியில், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, நியாயமாகவும் நோ்மையாகவும் வாக்களிப்போம், தவறாமல் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு - எனது உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

தொடா்ந்து, கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தும், ‘செல்பி பாயிண்ட்’ மூலம் புகைப்படம் எடுத்தும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், மேட்டூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேனா்கள் பொருத்தப்பட்டும், ஒலிபெருக்கிகள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வை தொடங்கிவைத்தும், வாகனங்களில் விழிப்புணா்வு ஒட்டுவிலைகளை ஒட்டியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் மாணவ, மாணவியா் விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, மேட்டூா் செயின் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அசோக்குமாா், மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.