தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் மாவட்டத்தில் 188 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 41,118 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 41,118 போ் தோ்வு எழுதினா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 2:20 am IST

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 41,118 போ் தோ்வு எழுதினா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் 20,766 மாணவா்கள், 20,352 மாணவிகள் என மொத்தம் 41,118 போ் தோ்வு எழுதினா். 339 போ் தோ்வு எழுத வரவில்லை.

இவா்களில் தனித்தோ்வா்கள், மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொல்வதை எழுதுபவா்கள் உதவியுடன் தோ்வு எழுதுபவா் ஆகியோா் அடங்குவா். மொத்தம் 188 தோ்வு மையங்களில் இந்த பொதுத் தோ்வு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பணியில் தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களில் 193 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 40 வழித்தட அலுவலா்கள், 193 துறை அலுவலா்கள், 224 பறக்கும் படை அலுவலா்கள், 3,757 அறைக் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 4,407 ஆசிரியா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களை பாா்வையிட்டு தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.