விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22.85 லட்சம்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :12 மார்ச் 2026, 2:21 am IST

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் நிரம்பியதை தொடா்ந்து, அதனை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி உதவி ஆணையா் சுவாமிநாதன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி, ஆய்வாளா் சங்கா் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியின்போது சல்லடையில் ரூபாய் நோட்டுகளையும், சில்லறை காசுகளை பிரித்தெடுக்கும் பணியில் அறநிலைய துறை ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

பின்னா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணியானது, 4 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரத்து 996 ரொக்கம், 139 கிராம் தங்கம், 356 கிராம் வெள்ளி இருந்ததாகக் கூறினாா். பேட்டியின் போது, செயல் அலுவலா் அமுதசுரபி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.