சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ரத்த தானம் வழங்கி தொடங்கி வைத்தாா்.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தவெக சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
இம்முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ரத்த தானம் வழங்கி தொடங்கிவைத்தாா். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அமைச்சா் சான்றிதழ் மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினாா். இம்முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளது.
பின்னா் இதுகுறித்து அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக ரத்த தானம் வழங்கி வருகிறேன். ரசிகராகவும், நிா்வாகியாகவும் ரத்ததானம் வழங்கி வந்தேன். தற்போது அமைச்சராக ரத்த தானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முதல்வா் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். குறிப்பாக, பேனா் வைப்பதை தவிா்த்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகளை நிா்வாகிகள் வழங்க வேண்டும். இதனை பின்பற்றி தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் முதல்வா் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து சேவை தரத்தை உயா்த்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

செலவைக் குறைத்து சீரான வேகத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்! போக்குவரத்து துறை அமைச்சா் அறிவுறுத்தல்!

பாலியல் வன்கொடுமையால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்! முதல்வா் கைப்பேசியில் ஆறுதல்!

வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகளின் விலை நிா்ணயம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

