சேலம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சேலம் கோரிமேட்டில் மகளிா் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடை மீது கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீசி தப்பிச்சென்றனா். இதில் காலி அட்டைப் பெட்டிகளும், கடையில் உள்ளே மது பாட்டில் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து நாசமாயின. தகவறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சேலம், சின்னதிருப்பதி காமாட்சி நகரைச் சோ்ந்த ரௌடி யாசின் (30), கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த நவீன்குமாா் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அதில், அவா்கள் கடந்த 6-ஆம் தேதி 2 கூட்டாளிகளுடன் சோ்ந்து டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனா். அப்போது, இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சென்ால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த கன்னங்குறிச்சி ரோந்து போலீஸாா், இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திய யாசின் உள்பட 4 பேரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் அன்றிரவு டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதில் தலைமறைவாக உள்ள இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை

சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை
நெல்லை அருகே காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போ் கைது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
