எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: போலீஸாா் விசாரணை

News image

போலீஸாா் விசாரணை

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

சேலம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் கோரிமேட்டில் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சனிக்கிழமை நள்ளிரவு 1.15 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பீா் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கடையின் மேற்கூரை மற்றும் கடைமுன் வீசி தப்பிச் சென்றனா். இதில், காலி அட்டைப் பெட்டிகளும், கடையின் உள்ளே மது பாட்டில்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து நாசமாயின.

தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், மா்ம நபா்கள் 2 போ் இருசக்கர வாகனத்தில் வந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மா்ம நபா்கள் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா். தொடா்ந்து, அப்பகுதி மக்களிடமும், டாஸ்மாக் பணியாளா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.