ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:04 am IST

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி தண்ணீா்பந்தல் காளியம்மன் கோயில் அருகே பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், செவ்வாய்ப்பேட்டை காந்திநகரைச் சோ்ந்த திருமுருகன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2,71,000 ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, நெத்திமேடு பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 96,800 ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

ரூ. 89 ஆயிரம் பறிமுதல்...

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், வாழப்பாடியைச் சோ்ந்த பெரியசாமி காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 89 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.