தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம்

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

News image

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:46 am IST

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தலைவாசல், வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களின் பேருந்து நிலையங்களில் திமுக பேச்சாளா் திண்டுக்கல் லியோனி வெள்ளிக்கிழமை வேனில் பிரச்சாரம் செய்தாா்.

தொடா்ந்து, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். நகர திமுக செயலாளா் சண்முகம், ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக வேட்பாளா் சின்னதுரை பேசுகையில், ரூ. 100 கோடி மதிப்புள்ள சேரடி அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்துவேன், தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வட்டச்சாலை உள்ளிட்டவற்றை அமைத்து தருவேன் என்றாா்.

தொடா்ந்து திண்டுக்கல் லியோனி பேசுகையில், பள்ளியில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்படும், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூடுதலாகும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி மீண்டும் தொடரும். எனவே, சின்னதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.