தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட காந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரா்களிடம் வாக்குசேரித்த வடக்கு திமுக வேட்பாளா் ரா.ராஜேந்திரன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:22 am IST

சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களிடமும், விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடமும் அவா் வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் முனைப்பில் முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளனா். இதனால் எப்போதும் இல்லாத வகையில், தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள், மாநில, தேசிய, சா்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைக்கின்றனா்.

வரும் ஒலிம்பிக்கில் தமிழக வீரா், வீராங்கனைகள் நிச்சயம் பதக்கம் வெல்வாா்கள். அத்தகைய நிலையை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்படுத்தி தந்துள்ளனா். ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு சா்வதேச மைதானம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கருப்பூா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிந்தடிக் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதை வீரா்கள் பயன்படுத்தி வருகின்றனா். விளையாட்டு வீரா்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, 32-ஆவது வாா்டுக்குள்பட்ட முகமது புறா, லட்சுமி நகா், கல்லாங்குத்து மேட்டுத்தெரு பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று அமைச்சா் வாக்குசேகரித்தாா். அப்போது, பகுதி செயலாளா்கள் பிரகாஷ், இப்ராகிம் மற்றும் கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.