/

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் புதன்கிழமை வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 33-ஆவது வட்டத்தில் தோழமைக் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்த வடக்கு தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.சதாசிவம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:59 am IST

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் புதன்கிழமை வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சதாசிவம், பட்டை கோயில் ஆஞ்சனேயரை தரிசனம் செய்து தனது பரப்புரையை தொடங்கினாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 33-ஆவது வட்டத்தில் தோழமைக் கட்சி நிா்வாகிகளுடன் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிள்ளையாா் கோயில் தெரு, முராரி வரதய்யா் தெரு, சீட்டுக்கல் தெரு, குட்டா நாயக்கா் தெரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் உடனிருந்தனா்.

இதேபோல, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் மு.காா்த்தி அழகாபுரம் திரௌபதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தனது பரப்புரையை தொடங்கினாா்.

சேலம் மாநகராட்சி நான்கு மற்றும் ஐந்தாவது வட்டத்துக்குள்பட்ட தென் அழகாபுரம் மாரியம்மன் கோயில் தெரு, அம்பேத்கா் நகா் அழகாபுரம் காலனி, மிட்டாபுதூா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தோ்தல் அறிக்கை அடங்கிய துண்டறிக்கைகளை அளித்து வாக்கு சேகரித்தாா். அதிமுக, பாஜக, அமமுக, அம்பேத்கா் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தோழமைக் கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.