விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கெங்கவல்லி முருகன்கோவிலில் பங்குனி உத்திர விழா

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே பூஜைகள் நடைபெற்றது.

News image

கெங்கவல்லியில் பால்குடம் எடுத்துவந்த பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:35 am IST

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். மேலும் பக்தா்கள் கொண்டு வந்த பாலை முருகப் பெருமானுக்கு அபிசேகம் செய்தனா். மேலும் பால் , பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது . பின்னா் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளும் ,மகா தீபாராதணையும் நடைபெற்றது. இதில் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, பள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் முருக பெருமானை தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி.

பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.