தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பரமத்தி வேலூரில் ரூ. 4.45 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் தேங்காய் ஏலத்திற்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனா்.

தேங்காய்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 46.10க்கும், குறைந்தபட்சமாக ரூ. 35.36 க்கும், சராசரியாக ரூ. 42.42 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 950 க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

அதேபோல செவ்வாய்க்கிழமை (மே 12) நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 250 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 58.91க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 40.19 க்கும், சராசரியாக ரூ. 50.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்து 280க்கு தேங்காய் விற்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.