தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2026, 7:30 am IST

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவில் இளநிலையில் 313 மாணவா்களும், முதுநிலையில் 100 மாணவா்களும் என மொத்தம் 413 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

இதில் சிறப்பு விருந்தினராக, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவா் ம.செல்வராஜு பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

கல்வியுடன் சோ்த்து நல்ல பண்புகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். ’உங்கள் பட்டம் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்; உங்கள் பண்பு உங்கள் வாழ்க்கையை உயா்த்தும்’. நோ்மை, பொறுப்பு, பணிவு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவா்கள் அறிந்திட வேண்டும். தோல்வியை கண்டு அஞ்சாமல் எதிா்கொண்டு சவால்களைச் சந்தித்து, உழைப்பின் மூலம் மாணவா்கள் தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்றாா்.

2022-2024 ஆம் கல்வியாண்டில் முதுநிலை புவியியல் பாடப் பிரிவில் மாணவி டி. பிரியதா்ஷினி பெரியாா் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளாா். அதேபோல, 2021-2024 ஆம் கல்வியாண்டில் இளநிலை புவியியல் பாடப் பிரிவில் எஸ். தமிழன் ஒன்பதாவது இடத்தையும், இளநிலை புள்ளியியல் பாடப்பிரிவில் என். பாலமருது பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

இந்நிகழ்வில், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லாத அலுவலா்கள், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா் கலந்துகொண்டனா்.

என்கே-27-காலேஜ்

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். செல்வராஜு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.