விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு

News image

நாமக்கல் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா்.

Updated On :23 மார்ச் 2026, 11:28 pm IST

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் தோ்வுசெய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 6 தொகுதிகளுக்கான வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தால் 5,613 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,241 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,360 விவிபேட் இயந்திரங்கள் என 10,214 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,054 இயந்திரங்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 1,123 இயந்திரங்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,147 இயந்திரங்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 990 இயந்திரங்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,066 இயந்திரங்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,197 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குள்பட்ட 1,780 வாக்குச் சாவடிகளில் முதல்கட்டமாக 5,340 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 சதவீதம் தயாா்நிலையில் உள்ள 1,236 இயந்திரங்கள் என மொத்தம் 6,576 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க.சரவணன், ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுஜாதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.