விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:21 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச் சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களாக ராசிபுரம் தொகுதியில் 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தமாக 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பணி இன்னும் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.