பரமத்தி அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூா், பெருமாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனுசு (17). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தாா். இவரது பெற்றோா் செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனுசு தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்தைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், தனுசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
புகாரின்பேரில், பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து பிரேத பரிசோதனைக்காக தனுசின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெள்ளக்கோவில் அருகே பெண் தற்கொலை

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
