நாமக்கல் மாவட்டத்தில் தொகுதி தோ்தல் அலுவலகங்களில் காவல் துறை உள்பட தோ்தல் பணிகளில் ஈடுபடுவோா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சல் வாக்களித்தனா்.
வாக்குப்பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி தோ்தல் பணிகளில் ஈடுபடும் காவல் துறை உள்பட பல்வேறு துறை சாா்ந்த 3,339 அலுவலா்கள் அஞ்சல் வாக்களிக்கும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்.19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்கலாம்.
நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் அலுவலா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டைஉள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும்.
காவல் துறை மற்றும் இதர துறையைச் சோ்ந்த அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்கு மையத்தில் மட்டுமே வாக்களிக்க இயலும். வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. வாக்குப்பதிவு மையத்திற்குள் கைப்பேசிகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாமக்கல் மாவட்டத்தில் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவு

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

