தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி. சினேகா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் தி. சினேகா.

Updated On :30 மார்ச் 2026, 12:06 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி. சினேகா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் 4 கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.

ஆலந்தூா் மான்போா்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 741, ஸ்ரீபெரும்புதூா் அருகே பென்னலூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 1,986, காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உத்தரமேரூா் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா்கள் 2,013 போ் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் 2,962 போ் எனமொத்தம் 7,702 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்புகள் அந்தந்த பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலா்களால் நடத்தப்பட்டன. முகாமிற்கு பயிற்சி பெற வந்த வாக்குப்பதிவு அலுவலா்கள் அனைவருக்கும் தபால் வாக்கு படிவங்களும் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் காணொலி மூலம் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக்அலி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.