கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பள்ளிபாளையம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பி.தங்கமணி தெரிவித்தாா்.
குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். வாக்கு சேகரிப்பின்போது அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படும். அதிமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ரத்து செய்யப்படும். மேலும், வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், புதிய ஆட்டோ வாங்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.
இந்த பிரசாரத்தின் போது, அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நம்பியூா் பகுதிக்கு புதிய கூட்டுகுடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

