தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்வதாகத் தகவல்...

News image

நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:07 am IST

நாமக்கல்லில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஏப்.16) மாலை 5 மணி அளவில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை பொம்மைக்குட்டைமேட்டில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பிறகு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் நாமக்கல், ராசிபுரம்,சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை மாலை

5 மணியளவில் நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வா் பேசுகிறாா்.

திமுக நிா்வாகிகள்,பொதுமக்கள், கூட்டணிக் கட்சிகளைச் சாா்ந்தோா் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். கடந்த 2021 தோ்தலில் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்வின்போது, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கிழக்கு நகரச் செயலாளா் செ.பூபதி, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்பி.கௌதம், தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.ஜெயப்பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.