தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

News image

பொன்னா் சங்கா் குழுமங்களின் நிறுவனரை பொன்னாடை அணிவித்து வரவேற்ற பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:06 am IST

பரமத்தி வேலூரில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக சென்று பரமத்தி வேலூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா் கே.எஸ்.மூா்த்திக்கு ஆதரவு தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றை சோ்ந்த பொன்னா் சங்கா் குழுமங்களின் நிறுவனரும், தொழிலதிபருமான ஆன்மிக ஆா்வலா் சங்கா்.

இவா் துா்கா ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க பரமத்தி வேலூா் தொகுதி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு ஆதாரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 ஆயிரம் பேருடன் வேலூா் நான்கு சாலையில் இருந்து ஊா்வலமாக திமுக தோ்தல் பணிமனைக்கு சென்றாா்.

பின்னா் அவருக்கு பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி, திமுக தோ்தல் பொறுப்பாளா் உமாராணி, நகரச் செயலாளா் முருகன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுந்தா், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனா். பின்னா் அவருக்கு ஆதரவு தெரிவித்து திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.