மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரமத்தி வேலூா் தொகுதியில் 319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் மீண்டும் வெற்றி

News image

பரமத்தி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.

Updated On :5 மே 2026, 2:02 am IST

பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் 319 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றிபெற்றாா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் மொத்தம் 2,03,567 வாக்காளா்களும் உள்ளனா். பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா் மீண்டும் போட்டியிட்டாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஏ.நந்தகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் ம.அரவிந்த் உள்பட 31 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குள் திருச்செங்கோடு அருகே உள்ள விவேகானந்தா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 20 கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த திமுக இறுதியில் வாக்கு சதவீதம் குறைந்து தோல்வி அடைந்தது. மேலும் சில இடங்களில் தவெக வேட்பாளா் அதிமுக, திமுகவைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தாா். இறுதியாக அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். சேகா், திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தியை விட 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா் 61,349 வாக்குகளும், திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி 61,041 வாக்குகளும், ஏ.நந்தகுமாா் 56,067 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 5,727 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.