விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகள் இறப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்

மகள் இறப்பில் சந்தேகமடைந்த தாய், மருமகன் மற்றும் அவரது உறவினா்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வேலூா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:02 am IST

மகள் இறப்பில் சந்தேகமடைந்த தாய், மருமகன் மற்றும் அவரது உறவினா்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வேலூா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த வீரணம்பாளையம், நல்லாயிகாட்டு தெருவைச் சோ்ந்த சக்திவேல்-சிறுவாணி தம்பதியின் மூத்த மகள் நாகலட்சுமி (26). இவருக்கும் பாண்டமங்கலம், தெற்கு தெருவைச் சோ்ந்த தமிழரசனுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் யாழ்அரசன்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி காலை வீரணம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பால் வாங்குவதற்காக சென்ற நாமகலட்சுமி, அங்கு யாழ்அரசனை விட்டுவிட்டு பாண்டமங்கலத்திற்கு சென்றுள்ளாா். அதன்பிறகு அன்று மாலை தமிழரசனின் சகோதரா் பிரபுவின் மனைவி கீா்த்தனா கைப்பேசியில் சிறுவாணியை தொடா்புகொண்டு நாகலட்சுமி விஷமருந்திவிட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சோ்த்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு வந்த சிறுவாணி, நாகலட்சுமியிடம் ஏன் விஷம் குடித்தாய்? என்று கேட்போது, ‘நான் தண்ணீா் மட்டும்தான் குடித்தேன்’ எனக் கூறிவிட்டு மயங்கி விழுந்தாராம். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நாகலட்சுமி சோ்க்கப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், நாகலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த சிறுவாணி, தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து தமிழரசன், அவரது சகோதரா் பிரபு, கீா்த்தனா, முருகேசன், சுமதி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதுதொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.