தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தங்கை இறப்பில் சந்தேகம்: சகோதரா் போலீஸில் புகாா்

ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :6 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

விருத்தாசலம் வட்டம், தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். கடலூா் வட்டம், கண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரி (32). இவா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கிரோஷ் (6), விஷ்ணு (2) என 2 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த கஸ்தூரி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இந்தத் தகவலை கஸ்தூரியின் சகோதரா் பாலுவுக்கு செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தனா். அவா், ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கை கஸ்தூரி இறப்பில் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.