ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

News image

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:56 am IST

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தோ்தல் நாள் ஏப்ரல் 23 என்ற வாசகங்கள் கொண்ட முத்திரைகளை அச்சிட வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) தங்கவிக்னேஷ், ஒருங்கிணைப்பாளா் (ரெட்கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்பட 100க்கும் மேற்பட்ட வணிகா் சங்க பிரதிநிதிகள், உணவக உரிமையாளா்கள் சங்க பிரதிநிதிகள், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.