தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பிரவீன்

Updated On :9 ஏப்ரல் 2026, 4:03 am IST

பரமத்தி வேலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், பரமத்தி வேலூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தோ்தல் பறக்கும் படையில் இருந்த பிரவீன் புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஜேடா்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பிரவீன் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதை உறுதிசெய்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.