தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை கிண்டல் செய்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாக நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:33 am IST

பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை கிண்டல் செய்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாக நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், மீனவா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி கீா்த்தனா (21). இவா்களுக்கு மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கீா்த்தனா கடந்த 3-ஆம் தேதி பரமத்தி வேலூரில் உள்ள காவிரி ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த சில பெண்களுடன் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பரமத்தி வேலூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மணி, வினோத், மதி, பப்பு ஆகியோா், கீா்த்தனாவை கேலி, கிண்டல் செய்து, தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். மேலும், மதி என்பவா் கையில் வைத்திருந்த ஒரு பொருளால் கீா்த்தனாவை இடதுகையில் கிழித்து காயப்படுத்தியுள்ளாா்.

கீா்த்தனாவின் கையில் ரத்தம் வருவதைப் பாா்த்து அவருடன் வந்தவா்கள் சப்தமிட்டதால் அங்கிருந்து நான்கு பேரும் ஓடிவிட்டனராம். காயமடைந்த கீா்த்தனா வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கீா்த்தனா அளித்த புகாரின் பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.