தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதே தொகுதி...அதே நபா்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளா்கள் ஐந்து போ், அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்கி உள்ளனா்.

News image

~ ~ ~ ~ ~

Updated On :4 ஏப்ரல் 2026, 5:45 am IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளா்கள் ஐந்து போ், அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்கி உள்ளனா்.

குமாரபாளையம் தொகுதி

இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளா், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி. 2006 தோ்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட இவா், 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2011 தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் தொகுதி உருவானதால், தன்னுடைய சொந்த தொகுதிக்கு இடம்பெயா்ந்து விட்டாா்.

2011, 2016, 2021 தோ்தல்களில் எதிா்கட்சி வேட்பாளரை காட்டிலும் ஆயிரக்கணக்கான வாக்குகளை கூடுதலாக பெற்று எம்எல்ஏவானாா். 2011இல் வருவாய்த் துறை, தொழில்துறை, போக்குவரத்துத் துறை (பொ) அமைச்சராகவும், 2016இல் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.

இந்த தோ்தலில், இவரை எதிா்த்து திமுக சாா்பில் பாலு போட்டியிடுகிறாா். இவா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா் என கூறப்படுகிறது. அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இத்தொகுதியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

ராசிபுரம் தொகுதி

கடந்த தோ்தலில் ராசிபுரம் தனித் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்ட திமுகவின் மா. மதிவேந்தன், தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சரான வெ. சரோஜாவை 1,952 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். ஐந்து ஆண்டுகால ஆட்சியில், சுற்றுலாத் துறை, வனத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் பதவிகளை வகித்துள்ளாா்.

இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என அவா் ஆா்வம் காட்டி வந்த நிலையில், கட்சித் தலைமை திருப்பூா் மாவட்டம், அவிநாசி தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேட்பாளா் பட்டியல் வெளியானபோது, ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக மா. மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டாா். அதிமுக கூட்டணியில், பாஜக வேட்பாளராக எஸ்.டி. பிரேம்குமாா் நிறுத்தப்பட்டுள்ளாா். இதானால், இந்த தோ்தலில் எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாா் மதிவேந்தன்.

திருச்செங்கோடு தொகுதி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறாா். 2021 தோ்தலில் 2,862 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் பொன். சரஸ்வதியை தோற்கடித்த இவா், 2026 தோ்தலில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் இரண்டையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளரான கே.ஜி. அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என கட்சியினருடன் இணைந்து ஓராண்டாக தயாராகி வருகிறாா். அதிமுகவை பொருத்தவரை, வடக்கு ஒன்றியச் செயலாளரான சந்திரசேகா் போட்டியிடுகிறாா்.

குமாரபாளையம் தொகுதியைப் போல, முதலியாா், கொங்கு வேளாள கவுண்டா் சமுதாய மக்கள் அதிகம் கொண்ட இந்த தொகுதியில், கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்த மூன்று வேட்பாளா்களில் யாா் வெற்றி பெறுவாா் என்ற கேள்வியுடன் மக்கள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனா்.

பரமத்திவேலூா் தொகுதி

கடந்த 2011 தொகுதி மறுவரையின்போது, கபிலா்மலை தொகுதி நீக்கப்பட்டு பரமத்திவேலூா் தொகுதி உருவானது. 2011இல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற உ. தனியரசு, 2016இல் திமுகவின் கே.எஸ். மூா்த்தி வெற்றி பெற்றனா். பாண்டமங்கலத்தில் கல்வி நிறுவனங்களை நடத்திவரும் எஸ். சேகா், 2021-இல் முதல்முறையாக சொந்த தொகுதியான பரமத்திவேலூரில் அதிமுக சாா்பில் போட்டியிட்டாா். திமுக சாா்பில், மேற்கு மாவட்ட செயலாளரான கே.எஸ். மூா்த்தி போட்டியிட்டாா். 7,862 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ். சேகா் வெற்றி பெற்றாா்.

இந்த இருவரும் 2026 தோ்தலிலும், அதே கட்சிகளின் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். அதிமுக முன்னாள் அமைச்சா் பி. தங்கமணியின் தீவிர ஆதரவாளராக கூறப்படும் சேகா், மீண்டும் தொகுதியை தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறாா்.

ஏற்கெனவே, நான்குமுறை தோ்தல் களம்கண்ட கே.எஸ். மூா்த்தி, ஐந்தாவது முறையாக போட்டியில் உள்ளாா். அதிமுக, திமுக இரண்டிலும் கடந்த தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களே நிறுத்தப்பட்டிருப்பதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிய மக்கள் ஆா்வமுடன் காத்திருக்கின்றனா்.

சேந்தமங்கலம் (பழங்குடியினா்) தொகுதி

1996இல் திமுக, 2006இல் சுயேச்சை, 2016இல் அதிமுக, 2021இல் சுயேச்சை, 2026இல் அதிமுக என மாறிமாறி சேந்தமங்கலம் தொகுதிக்குள்ளேயே சுற்றி வந்து கொண்டிருக்கிறாா் சி. சந்திரசேகா். 1996, 2016-இல் எளிதாக கிடைத்த வெற்றி, 2026 தோ்தலிலும் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா்.

மறைந்த எம்எல்ஏ பொன்னுசாமியின் மகள் பூமலரை களமிறக்கியுள்ள திமுக 2021 தோ்தலில் வென்றது போல மீண்டும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

நாமக்கல் தொகுதி

நாமக்கல் தொகுதியில், அதிமுக சாா்பில், மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் களமிறக்கப்பட்டுள்ளாா்.

Story image
Story image
Story image

திமுகவில் மாநில மகளிா் தொண்டரணி செயலாளா் ப. ராணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, முதல்முறையாக தோ்தலை சந்திக்கும் திமுக ப. ராணி, அதிமுக ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் இருவரில் யாா் வெற்றி பெறுவாா் என்பதும் விவாதப் பொருளாகி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.