விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 1:21 am IST

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

சேந்தமங்கலம் (எஸ்.டி.) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பி.பூமலா் பொன்னுசாமியை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. மேலும் பேசியதாவது:

சேந்தமங்கலம் தொகுதியில் ரூ. 6.05 கோடியில் காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் புதிய குடிநீா்த் திட்டத்தின்கீழ் மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கொல்லிமலையில் புதிய ரத்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்- துறையூா் சாலை விரிவாக்கம் (கூலிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை) ரூ. 38 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அதிக அளவு மிளகு சாகுபடி செய்யப்படுவதால் புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.

சேந்தமங்கலத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு 8,000 பேருக்கு பழங்குடியினா் நலவாரிய குடும்ப உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந் நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.மாதேஸ்வரன், திமுக தொகுதி பாா்வையாளா் ரேகா பிரியதா்ஷிணி, ஒன்றியச் செயலாளா்கள் அ.அசோக்குமாா், கே.பி.ராமசுவாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.