ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கந்துவட்டி புகாரில் கைதான திமுக பிரமுகரின் அலுவலகத்தில் போலீஸாா் சோதனை

ஒசூரில் கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகருக்குச் சொந்தமான சீட்டு நிதியகத்தில் (சிட்ஃபண்ட்) போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

News image

ஒசூரில் திமுக பிரமுகரின் சீட்டு நிதியகத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :28 மே 2026, 1:53 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகருக்குச் சொந்தமான சீட்டு நிதியகத்தில் (சிட்ஃபண்ட்) போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், திமுக பிரமுகருமான என்.எஸ். மாதேஸ்வரன் நிதியகம் நடத்தி வருகிறாா். இவரிடம் ஒசூா் சின்ன எலசகிரியைச் சோ்ந்த சுரேஷ்பாபு- மானசா தம்பதி ரூ. 1.20 கோடி கடன் பெற்றனராம். பின்னா், அசல் மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ. 2.30 கோடி திருப்பி செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேலும் ரூ. 1 கோடி கேட்டு சுரேஷ்பாபுவை என்.எஸ். மாதேஸ்வரன் மிரட்டியதாக ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் சையத் முபாரக் ஞாயிற்றுக்கிழமை என்.எஸ். மாதேஸ்வரனை கைது செய்தாா். பிறகு அவருக்கு உடல் தகுதிச் சான்று பெற ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிப்காட் போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக மாதேஸ்வரன் கூறியுள்ளாா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய அவரது மகன் சேரனை போலீஸாா் தேடிவருகின்றனா். இதனிடையே, என்.எஸ். மாதேஸ்வரனின் சீட்டு நிதியகத்தில் சிப்காட் காவல் ஆய்வாளா் சையத் முபாரக் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, விடியோ ஆதாரத்துடன் சில முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.