பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :9 ஜூன் 2026, 1:07 am IST

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நிவேதா பெத்துராஜ் உதயநிதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை வந்தது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாக அதிகாரிகள் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, திருவாரூா் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகம், அலுவலக அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்யப்பட்டது. பின்னா், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் போலீஸாா் பணியில் இருந்தனா். மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவா் யாா் என்று சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.