ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கிருஷ்ணகிரியில் ரூ.3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

News image

மஞ்சள்

Updated On :23 மே 2026, 1:14 am IST

கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், 9 விவசாயிகள், 42 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 13,339-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 12,899-க்கும், உருண்டை மஞ்சள் அதிகபட்சமாக ரூ.12,473-க்கும், குறைந்தபட்சமாக ரூ.11,899-க்கும், பனங்காலி ரூ. 26,009-க்கும் ஏலம் போனது. மொத்தம், 2,662 கிலோ மஞ்சள், ரூ. 3.52 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலம் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் பழனியம்மாள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விவசாயிகள், தங்கள் விளைபொருளை கிடங்கில் இருப்பு வைத்து, சந்தை மதிப்பில், 50 முதல் 75 சதவீதம் வரை ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் பெறலாம். உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 99522 67990 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.