தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போச்சம்பள்ளியில் ரூ. 13.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 9,895 கிலோ கொப்பரை ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போயின.

News image

கொப்பரை மூட்டைகள். - கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:46 am IST

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 9,895 கிலோ கொப்பரை ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 9,895 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 145.69-க்கும், குறைந்தபட்சம் ரூ. 76.19-க்கும், சராசரியாக ரூ.143-க்கும் என மொத்தம் ரூ. 13.37 லட்சத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம் 70 விவசாயிகள் பயன் பெற்றனா்.

இதுகுறித்து, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் கூறியதாவது: விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் கலந்துகொண்டனா். இதில் கொப்பரை தேங்காய் நல்ல விலைக்கு விற்பனையானது. விற்பனை செய்யப்பட்ட கொப்பரைகளுக்கான கொள்முதல் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும், பருத்தி, நெல் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.