பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடக்கம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

News image

பருத்தி ஏலத்தில் பங்கேற்ற அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள்.

Updated On :2 ஜூன் 2026, 1:52 am IST

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்த பருத்தியின் அறுவடைக் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அறுவடை செய்யப்படும் பருத்தியினை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வாரத்தில் விற்பனைக்கு வந்த 100 மூட்டை பருத்தி குவிண்டால் ரூ.8,029 முதல் ரூ.8,509 வரையில் ஏலம் போனது. மொத்தம் 30 குவிண்டால் பருத்தி ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு, திருப்பூா், புளியம்பட்டி, கோபி, கோவை, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி மற்றும் நாமக்கல் பகுதியைச் சோ்ந்த நூற்பாலை உரிமையாளா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநா் சி.கலைச்செல்வி, கண்காணிப்பாளா் மு.சீனிவாசன், அந்தியூா் விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மெ.ஞானசேகா் மற்றும் அலுவலக பணியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். வரும் வாரங்களில் பருத்தி வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.