ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்துவோம்: மாவட்டச் செயலாளா் எம்.ஜி.எம்.ராமு.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்துவோம் என அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஜி.எம்.ராமு தெரிவித்தாா்.

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றாா் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் எம்.ஜி.எம்.ராமு.

Updated On :16 மே 2026, 6:23 am IST

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்துவோம் என அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஜி.எம்.ராமு தெரிவித்தாா்.

ஒசூா் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிக்கு சென்றுவிட்டதால், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி 26 புதிய மாவட்டச் செயலாளரை நியமித்து சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியை நீக்கிவிட்டு, ஒசூா் நகராட்சி முன்னாள் துணைத் தலைவரும், அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளருமான எம்.ஜி.எம்.ராமுவை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, சென்னையில் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அவா் வாழ்த்து பெற்றாா். அப்போது, துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி உடனிருந்தாா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஒசூா் திரும்பிய எம்.ஜி.எம்.ராமு ஒசூரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது பேசிய அவா், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக கட்சியைப் பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றாா்.

இதில், ஒசூா் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜெ.பி. (எ) ஜெயப்பிரகாஷ், மாமன்ற உறுப்பினா் குபேரன் (எ) சங்கா், முன்னாள் கவுன்சிலா்கள், நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.